Sunday, December 8, 2013

சங்கர நேத்ராலயாவுக்கு ரூ.1.95 கோடி:பாரத ஸ்டேட் வங்கி உதவி


சங்கர நேத்ராலயாவுக்கு ரூ.1.95 கோடி:

பாரத ஸ்டேட் வங்கி உதவி

 

சென்னை:சென்னை, சங்கர நேத்ராலயா மருத்துவமனைக்கு, சமூக கூட்டாண்மை பொறுப்பு திட்டம் கீழ், 1.95 கோடி ரூபாய் நிதி உதவியை, பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.

 

பாரத ஸ்டேட் வங்கி சார்பில், சமூக கூட்டாண்மை பொறுப்பு திட்டம் கீழ், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை, நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயாவில் நடந்தது. சங்கர நேத்ராலயா மருத்துவ மனையின் விரிவாக்க கட்டுமான பணிக்காக, 1.95 கோடி ரூபாய் காசோலையை, வங்கி தலைமை அதிகாரியும், தேசிய வங்கி குழு தலைவருமான, கிருஷ்ணகுமார் வழங்கினார்.

 

காசோலையை, சங்கர நேத்ராலயா தலைவர் டாக்டர் பத்ரிநாத் பெற்றுக் கொண்டார். சென்னை மண்டல தலைமை பொது மேலாளர் வர்ஷா புரந்தரே, பொது மேலாளர்கள் சந்திவ் சந்தா, கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

மேலும், திருநெல்வேலி அமர் சேவா சங்கம், தூத்துக்குடி நாசரேத் திருச்சபை டிரஸ்ட், மதுரை அட்சயா அறக்கட்டளை மற்றும் தேனி ரீச்சுடு தி அன்ரீச்சுடு தொண்டு நிறுவனங்களுக்கும், தலா ஒரு ஆம்புலன்ஸ் வாகனங்களையும், பாரத ஸ்டேட் வங்கி வழங்கியது.

 

No comments:

Post a Comment